உள்நாடு

வை.எம்.எம்.ஏ. யில் இடம்பெற்ற சமூக நல்லிணக்க இப்தார்..!

புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு, கொழும்பு – 09, தெமட்டகொடை வீதி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேரவையின் மத்திய கொழும்பு கிளை மற்றும் பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் ஏற்பாட்டில், பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் தலைமையில், வை.எம்.எம்.ஏ. யின் கொழும்பு மாவட்டக் கிளைகளின் நிதி உதவிகள் மூலமான முழு அனுசரணையில் மிக விமர்சையாக இவ் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் “சட்ட முதுமாணி” ஓ.எல். அமீர் அஜ்வாத், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்தார் நிகழ்வை சிறப்பித்தார்.
இவ் இப்தார் நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் அல் – ஹாஜ் காலித் எம். பாரூக், பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி – கொழும்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரி அல் – ஹாஜ் அஷ்ரஃப் ரூமி, பொதுச்செயலாளர் ஆஷிப் ஷுக்ரி, பொருளாளர் முஹம்மத் பிர்தௌஸ், ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் புதல்வர் அலி அஸீஸ், சுகாதாரப் பணியகத்தைச் சேர்ந்த டொக்டர் பத்துவந்துதவ ( Dr. Batuwanthudawa ), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில், பேரவை மற்றும் பேரவையின் மத்திய கொழும்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *