உள்நாடு

2024 அரச ஓவிய சிற்ப விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம், மற்றும் அரச கட்புலக்கலை ஆலோசனைக் குழு என்பன ஏற்பாடு செய்துள்ள, 2024 அரச ஓவிய சிற்ப விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2024 மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இவ்விண்ணப்பங்களை, 2024 ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பப்படிவங்களை, கலாசார உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம் அல்லது கலாசார உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் அல்லது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

www.culturaldept.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாகவும், DEPARTMENT OF CULTURAL AFFAIRS என்ற முகநூல் பக்கம் ஊடாகவும் அல்லது அரச கட்புல கலை ஆலோசனைக்குழு ( 011-2882551 ) ஊடாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

( ஐ.ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *