சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த இப்தார்..!
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், அல்ஹிலால் வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்க புதிய செயலாளர் எம்.சி. கமால் நிஷாத், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம். அப்துல் மலிக், முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், உட்பட முன்னாள் கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், இதர பாடசாலை அதிபர்கள், பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் ஆசிரியர் மௌலவி ஏ.கலீலுர்ரஹ்மான் (ஸலபி) யால் நோன்பு பற்றிய பயான் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)