உள்நாடு

குருநாகல் பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் விசேட வைபவம் நகரிலுள்ள 1000 பேர்களுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு..!

குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் விசேட வைபவம் சங்கத்தின் தலைவர் எம். வை. ஏம். கியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குருநாகல் மாநகர ஆணையாளர் அஜந்த குனவர்த்தன கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன் போது குருநாகல் மாட்ட பொலிஸ் அத்திட்சகர். கஸ்தூரி ஆராய்ச்சி, குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிங்கள வர்த்தக சங்கத்தின் தலைவர் சரத் வடமேல் மாகாண வர்த்தக சங்கத் தலைவர் கீர்த்தி குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மொயினுதீன் அசார்தீன் மற்றும் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளியின் தலைவர் மிலான் உள்ளிடட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

 

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *