உள்நாடு

யாழில் மாபெரும் இப்தார் நிகழ்வு..!

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் கௌரவ திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் ஏற்பாட்டில் இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் கெளரவ திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் (பதில்) திரு.மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதம கணக்காளர் திரு.எஸ்.சிவரூபன் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.
  மெளலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் (காஸிமி) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமானது.
“இப்தாரும் சமூக நல்லிணக்கமும்” எனும் தொனிப்பொருளில் மௌலவி எம்.ஏ.பைசர் (காஸிமி,மதனி) அவர்கள் உரை நிகழ்த்தினார்.
  மஃரிப் தொழுகை அதானை மௌலவி எம்.ஏ.சி.எம்.ஜாபிர் (நத்வி) அவர்கள் அழகான முறையில் சொன்னார். யாழ் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் மெளலவி. எஸ்.எம். நிஸ்தாக்(காஸிமி) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இவ்விசேட இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பள்ளிவாசல்களில் கடமைபுரியும் மெளலவிமார்கள், உலமாக்கள், யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள், இளைஞர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் உறவுகள் மற்றும் சகோதரத்துவ இனத்தைச் சேர்ந்த உறவுகள் பலரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(யாழ் பரீட் இக்பால்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *