விளையாட்டு

டெஸ்டிலிருந்து விலகி நாடு திரும்பினார் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி இன்று இலங்கை திரும்புகிறார்.

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி சிட்டகிராமில் இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் போட்டியின் 4ஆவது நாள் ஆகும். இந்நிலையில் இலங்கை அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் இப் போட்டியின் முதல் இன்னிங்ஷில் 59 ஓட்டங்களையும் , 2ஆவது இன்னிங்ஸில் 9 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார். இந்நிலையில் தினேஷ் சந்திமால் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசர மருத்துவ காரணத்திற்கான இப் போட்டியிலிருந்து விலகி உடனடியாக நாடு திரும்புவதாக அறிவித்திருந்தார்.

மேலும் இப் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *