உள்நாடு

பறகஹதெனிய இப்தார் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஜம்மிய்யது அன்சாரிஸ் சுன்ன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடத்திய நோன்பு திறக்கும் விசேட இப்தார் நிகழ்வு பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் தலைவர் அஷ்ஷெய்ஹ் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜம்மிய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன் போது கலாநிதி எம். ஆர். எம். அம்ஜத் ராசிக் மதனி மற்றும் அஷ்ஷெய்ஹ் ரஸ்மி ஜாஹீத் அமீனி ஆகியோர்களுடைய மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *