உள்நாடு

மூதூரில் மகளிரைக் கௌரவித்து உதவி ஊக்கமளிக்கும் நிகழ்வு..!

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வளமான எதிர்காலத்தை வடிவமைத்து முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் செவ்வாயன்று 15.03.2024 இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு  மூதூர் பிரதேச செயலாளர் எம்பி.எம். முபாறக்  தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில்  சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க பெண்கள்  முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, சட்டத்தரணிகளான ஏ.எப். ஷிபா, எஸ்.எப். சபியா, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதா  பானு உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு  உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *