உள்நாடு

நாம் வடக்கிற்கு வந்து தேசிய கீதத்தை தமிழில் பாடுகின்றோம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாம் வடக்கிற்கு வந்து தேசிய கீதத்தை தமிழில் பாடுகின்றோம் என தொழில் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா ஸ்மார்ட் யூத் க்ளப் இளைஞர் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டுகளுக்கு முன் நாம் தேசிய கீதத்தை தமிழில் பாடினோமா? இல்லை இந்நாடு சகோதரத்துவம் வாழும் பிண்ணனியை உருவாக்கியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே.  தமிழ்மொழியில் தொடர்பாடல் கொள்ளும் மக்களுக்கு 9 வருடங்களுக்கு முன் ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்தார். உலகெங்கிலும் இருக்கின்ற தொழில் வெற்றிடங்களுக்கு எமது இளைஞர் யுவதிகளை அனுப்பி வைப்பதற்காக பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *