உள்நாடு

அடுத்து வரும் தேர்தல்களில் விரலுக்கு மை பூசுவது நிறுத்தம்..! -தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல்களின் போது வாக்காளர்களது கைவிரல்களுக்கு மை பூசுவது நிறுத்தப்படவுள்ளது. தேர்தலின் போது அடையாள அட்டையை சமர்பிப்பது கட்டாயமாகி இருப்பதனால் கைவிரல்களுக்கு மை பூசுவதனை நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இத்தீர்மானம் வரும் தேர்தல்களில் இருந்து அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *