உள்நாடு

துறைமுக நகர் வரை நீளும் அதிவேக வீதி ஜுலை முதல் திறப்பு

கொழும்பு, இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அதிவேக வீதியை துறைமுகத்தில் இருந்து இடையூறுகள் இன்றி கொள்கலன்கள் போக்குவரத்திற்கான புதிய உள்நுழைவாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக வீதிக்கு 28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *