உலகம்

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு தாயிப்பில் மகத்தான வரவேற்பு!

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா நகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்விற்கு தாயிப் “இந்தோ லங்கா சமூகம்” நேற்று இப்தாருடன் மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தது.

இந்தோ லங்கா சமூக அமைப்பின் தலைவர் முஹம்மட் நசார் முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க இந்திய நாட்டைச் சேர்ந்த டொக்டர் அஸீம் அவர்களினால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு சர்வதேச இஸ்லாமிய நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அஸ்மி அவர்கள் விஷேட நற்சான்றிதழ் வழங்கி முன்னாள் ஆளுநரை கௌரவித்தார்கள்.

அத்தோடு இலங்கை இந்திய பிரமுகர்களுக்கு மத்தியில் முன்னாள் ஆளுநர் விஷேட உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

 

(எம்.எஸ்.எம். சஜீ – ஊடகப்பிரிவு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *