உள்நாடு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு. சீன ஜனாதிபதி உறுதி

இலங்கையின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, இறைமையின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்னிற்கும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை பெய்ஜிங்கில் நேற்று சந்தித்த போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, பரஸ்பர மரியாதை உள்ளிட்ட கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *