உள்நாடு

மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் சைக்கிளில் பயணித்த இளைஞனும் யுவதியும் பலி..!

மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் சைக்கிளில் பயணித்த இளைஞனும்  யுவதியும் எதிர்பாராதநிலையில் மரணமான பரிதாப சம்பவமொன்று  மாத்தளை கொஹொம்பிலிவெல  என்ற இடத்தில் கடந்த 25 ந்திகதியன்று இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இம்ரான்  (29) என்ற இளைஞனும்  சந்திரா (30)  என்ற யுவதியும்   உயிரிழந்துள்ளனர்  விபத்தில் சிக்கிய இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மாத்தளை ஆதார வைத்தியசாலைக்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு அவ்விருவரும் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து மாத்தளை போலீசார் விசாரனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது  விபத்துக்குள்ளானவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய தற்போது  உக்குவளை வரக்காமுறயில் வசிப்பவர்களாவர் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் காரும் பலத்த சேதமடைந்துள்ளன.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *