உள்நாடு

மஹகொட அஹதிய்யாவின் வருடாந்த இப்தார்

பேருவளை மஹகொட அஹதிய்யா சமயப் பாடசாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு மருதானை பி.ஆர்.மண்டபத்தில் தலைவர் ஏ.ஐ.எம்.ரியாஸ்தீன் ஹாஜியார், அதிபர் பி.எஸ்.எம்.சியாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பேருவளை பிரதேச செயலாளர் ரன்ஜன் பெரேரா, மொல்லியமலை ஹிழ்ரியா பள்ளிவாசல் கதீப் மௌலவி எம்.எஸ்.எம்.பாஸில் (அஷ்ரபி-அம்ஜதி), அகில இலங்கை அஹதியா சம்மேளன உப செயலாளர் ஹிசாம் ஸுஹைல், தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவர் ஏ.பி.எம்.சஸுஹைர் ஹாஜியார் உட்பட உலமாக்கள், பேருவளை பிரதேச செயலக அதிகாரிகள், சிங்கள பிரமுகர்கள் என 300க்கும் அதிகமானோர் பங்குபற்றினர்.

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *