உள்நாடு

ரத்மலானை பள்ளி அபிவிருத்தி பணிகளும் இப்தார் நிகழ்வும்

ரத்மலாானை ஜும்ஆப் பள்ளிவாசலில் அபிவிருத்திப் பணிகளும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் நேற்று 25 ஆம் திகதி பள்ளிவசலில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது கல்கிசை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஸ்பக்குமார, மற்றும் முன்னாள பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசேகர, கல்கிசை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சமுக சேவைபிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. தயானந்த மற்றும் கல்கிசை ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர், ரத்மலானை பிரதேச பிரிவில் வாழ் சமுக சேவை பிராஜா உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர். மற்றும் ரத்மலானை பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், உலமாக்கள், ரத்மலானை பிரதேச வாழ் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதுடன் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *