உள்நாடு

கல்முனை பிரதேச ஆஸ்பத்திரிகளில் பணிப் பகீஷ்கரிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் அக்கரைப்பற்று, பபனங்காடு பிரதேச வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவசர சேவை சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிப்படைந்துள்ளன. அதுமாத்திரமின்றி வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.

அண்மையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் மாணவனொருவர் மரணித்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது வைத்தியசாலை உடைமைகள் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமையை கண்டித்தும் இப் பணிப்பகீஷ்கரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *