உள்நாடு

சர்வ சமய மாணவர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்வு..!

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்லூரியின் அபிவிருத்திக் குழு, முஸ்லிம் மஜ்லிஸ் மாணவிகள் இணைந்து நடத்திய விசேட இப்தார் நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அதிபர் நதீரா இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கண்டி கல்வி வலய அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ரஸீகா கலுப்பானகே உதவிக் கல்விப் பணிப்பாளர் பௌசுல் அமீன், கண்டி மாநகர சபையின் ஆணையாளர் இஸ்ஹான் விஜயதிலக பௌத்த, பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம். சி. கமால்ஹஸன் கண்டி மாநகர முன்னாள் பிரதி முதல்வர் இலாஹி ஆப்தீன், மற்றும் பௌத்த, கிறிஸ்தவ இஸ்லாமிய சமயப் பெரியார்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்,
இதன் போது கண்டி நகரிலுள்ள சிங்கள, தமிழ் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *