உள்நாடு

நிந்தவூர் அல்-அஷ்ரகில் பாரம்பரிய மரங்கள் நடல்..

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் முன்னாள் அதிபர்களாகக் கடமையாற்றிய எஸ்.எச்.ஏ. அலியார் மற்றும் ஐ.எல். லத்தீப் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்து தற்போதைய அதிபர் ஏ .அப்துல் கபூர் அவர்களைச் சந்தித்து பாடசாலையின் தற்கால விடயங்கள் பற்றி கலந்துரையாடல் செய்தனர். அத்துடன் பாடசாலையின் நிந்தவூர் பாரம்பரியங்களை நினைவு கூருமுகமாக பல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்தனர்.
அவ்வகையில் நிந்தவூரின் வரலாற்று பிரதிபலிப்பை நினைவு கூரத்தக்க பனிச்ச மரத்தையும், பெறுமதிமிக்க கருங்காலி மரத்தையும் கொண்டு வந்து நேற்று முன்தினம் பாடசாலையில் நாட்டினர்.
பாடசாலையின் மீது மதிப்பு கொண்டு வருகை தந்த முன்னாள் அதிபர்கள், மரக்கன்றுகளை நடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பராமரிப்பை பாரமெடுத்த ஆசிரியர் வை.எம். அஷ்ரப்
அவர்களுக்கும், கல்வி சாரா ஊழியர் ஏ.ரம்ஸான் அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் ஏ. அப்துல் கபூர் உட்பட பிரதி, உதவி அதிபர்களுக்கும்  நன்றிகளைத் தெரிவித்துக் கொன்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *