உள்நாடு

கிழக்கு ஆளுனர் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் இஃப்தார்..!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது

இதில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்ற உறுப்பினர்களான எச் எம் எம் ஹரீஸ் . அலி சாஹீர் மெலானா முஷர்ராப் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி. எம். எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மலேசிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் உட்பட கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என என பலரும் கலந்து கொண்டனர்.

ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகிறது.

 

(நூர்தீன் MSM)

 

 

 

படங்கள்: செந்தில் தொண்டமான் முகநூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *