உள்நாடு

மலையக பாடகி அசானிக்கு, மடிக்கணினி வழங்கிய கனடிய தமிழர் பேரவை..! பேரவை சார்பாக வழங்கி வைத்த மனோ கணேசன்..!

மலையக பாடகி அசானிக்கு, கனடிய தமிழர் பேரவை மடிக்கணினி வழங்கியது. பேரவை சார்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பாடகி அசானியை தனது இல்லத்துக்கு அழைத்து, மடிக்கணினியை வழங்கி வைத்தார். கொழும்பில் எளிமையாக நடைபெற்ற இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முருகேசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்து கூறிய மனோ எம்பி, “எங்களது பாடகி அசானிக்கு இந்த மடிக்கணினியை கனடிய தமிழர் பேரவை வழங்கி உள்ளது. நான் இதில் இரண்டு தரப்புக்கும் இடையிலான இணைப்பாளர் மட்டுமே. இதன் மூலம், கனடிய தமிழர் பேரவை இந்நாட்டில் வாழ்கின்ற மலையக தமிழர் உட்பட ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வாதாரங்கள் தொடர்பான தனது அக்கறையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. பாடகி அசானி மற்றும் நமது மக்கள் சார்பாக கனடிய தமிழர் பேரவை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை  நான் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *