உள்நாடு

ஜனாதிபதி ரணில் இன்று யாழ் விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *