உள்நாடு

சாய்ந்தமருதில் உலக காசநோய் தினம் – 2024 அனுஷ்டிப்பு 

உலக காசநோய் தினம் 2024 னை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காச நோய் தொடர்பான நடைபவணி விழிப்புணர்வு நிகழ்வொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.
காசநோய் சம்பந்தமாகவும், சமூகத்தில் காசநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, “காசநோயற்ற கல்முனை பிராந்தியத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னால் ஆரம்பித்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் முடிவடையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *