உலகம்

ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுங்கள்; இன்றேல் கத்தியால் குத்திக் கொன்று விடுவோம்..! வன்முறை கும்பல் தம்மை அச்சுறுத்தியதாக ஆப்கான் மாணவன் வாக்குமூலம்..!

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் கொன்று விடுவோம்” என்று கூறி குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இஸ்லாமிய மாணவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே சம்பவம் இடம்பெற்றது. இனம் தெரியாத சில நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இத் தாக்குதலில் இரண்டு மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இப்பல்கலைக்கழகத்தில் கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இத்தாக்குதலினால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கும் அதே வேளை அங்கு கல்வி கற்கும் ஆப்கானிஸ்தான் மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் வெளி ஊர்களில் இருந்து வரும் மாணவர்கள் இப்பல்களை கழகத்தில் தங்கி கல்வி கற்பது என்பது பெரும் சவாலாக உள்ளது சர்வதேச மாணவர்கள் உள்ள விடுதிக்கு வந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுங்கள் இல்லையென்றால் கத்தியால் கொன்று விடுவோம் என்று கொலை அச்சுறுத்தல் விடுத்து அச்சுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அகமதாபாத் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனினும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் இவ்வழக்கில் குற்றவாளிகளை இனம் கண்டு விரைவில் கைது செய்யப் போவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலும் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே நீ மோதல் இடம் பெற்றிருக்கலாம் என அகமதாபாத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *