உலகம்

இலங்கை மாணவர்களுக்கு மேகாலய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதி..!

மேகாலய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இலங்கையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப சட்டக் கல்விக்கான எதிர்காலத்தினையும், அடுத்த தலைமுறையினரை சட்ட வல்லுனர்களாகவும், அறிஞர்களாகவும் வளர்ப்பதற்காக பலதரப்பட்ட கல்வித் திட்டங்களை கொண்டு மேகாலயா தேசிய சட்ட பல்கலைக்கழகம் 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

2024 ஆம் கல்வியாண்டுக்கான திட்டங்களில் எதிர்காலம் சார்ந்த அணுகு முறையை முன்னோடியாக கொண்டு இளங்கலை, முதுமாணி மற்றும் Ph.D ஆகியவற்றுக்கு ஆர்வமுள்ள இலங்கை மாணவர்களை அழைக்கின்றது.

இது தொடர்பாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கொழும்பு கேட்வே கல்லூரியில் நுழைவுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இத் தேர்வில் வழங்கப்பட்ட வரையறை புள்ளிகளை எட்டும் மாணவர்கள் அடுத்த கட்டத்தில் நுழைவார்கள்.

மேலும் மாணவர்கள் இது தொடர்பான சந்தேகங்கள் அல்லது மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள திருமதி. இடரிலாங் சைம்லியை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: +0913463507700, மின்னஞ்சல்: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *