உள்நாடு

அம்பாறை மாவட்ட புதிய சமுர்த்தி பணிப்பாளராக அகமது ஷாபிர் கடமையேற்பு

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.சி அகமது ஷாபிர் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக இன்று (19) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தமன பிரதேச செயலகத்தில் சுமார் ஏழு வருடங்கள் உதவி பிரதேச செயலாளராகவும், அட்டாளைச்சேனையில் சுமார் மூன்று வருடங்கள் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி இருந்தார். அட்டாளைச்சேனை அல் – ஜென்னா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியையும், அக்கரைப்பற்று அஸ்- ஸிராஜ் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிகளில் தனது இடை நிலை கல்வியையும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்தர கல்வியினையும் பூர்த்தி செய்து, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்வாரி கலைமாணி பட்டத்தினையும் பூர்த்தி செய்த இவர், சிறந்த பேச்சாளராகவும், அல்-குர்ஆனை அழகான தொனியில் ஓதக்கூடியவராகவும், பல்துறை சார்ந்த ஆளுமைகளை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராமல் தனது சேவையை வழங்கிய இவர் சமூக சேவையில் அதிக பற்று கொண்டவராகவும் திகழ்கின்றார். தற்போது அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றதையடுத்து அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் அவருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஏ.எச்.எம்.ஹாரீஸ் – (மத்திய முகாம் செய்தியாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *