உள்நாடு

முஸ்லிம் பாடசாலை விடுமுறையை வினைத்திறனாக்கள்.- கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

2024ம் கல்வி ஆண்டில் முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை இம்மாதம் 08ம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி வரை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தில் சமய கிரியைகளில் ஈடுபடுவதற்காக கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. விடுமுறை காலத்தில் பாடசாலைச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாதவாறு சுத்தமாக வைத்திருத்தல், தற்போது நிலவும் வரட்சி நிலை காரணமாக பாடசாலை வளாகத்தினுள் உள்ள மரஞ்செடிகள் இறந்துவிடாது நீரை ஊற்றிப் பாதுகாத்தல் மற்றும் பாடசாலையின் சகல உடமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

மேலும் ரமழான் காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் ஆன்மீக செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையில் காணப்படும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்து நோன்பின் மாண்புகள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவொன்றினை நிகழ்த்தச்செய்யுமாறும் எமது தாய்நாட்டின் நலனுக்காகவும் சகல சமூகத்தினரும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக்கொள்வதாக கல்விப் பணிப்பாளரும், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை கல்விச் செயலாளருமான என்.ரீ.நஜுமுதீன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *