விளையாட்டு

நாளைய போட்டியிலிருந்து காயத்தால் விலகினார் டன்சிம் ஹசன் சகீப்

இலங்கை அணிக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியின் வேப்பந்து வீச்சாளரான டன்சிம் ஹசன் சகீப் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறயுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் டன்சிம் ஹசன் சகீப் இலங்கை அணியின் முதல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஓட்டக் குவிப்பிற்கு இடையூராக இருந்தார். இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் டன்சிம் ஹசன் கசீப் காயமடைந்தார். இதனால் அவர் இலங்கை அணிக்கு எதிராக நாளை சிட்டகொங்கில் இடம்பெறவுள்ள 3ஆவதும், இறுதியுமான போட்டியில் பங்கேற்க மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *