விளையாட்டு

முக்கிய வீரர்களின்றி ரி20 தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாட இருப்பதாகவும் அதற்கான போட்டி அட்டவணையினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

இதன்மூலம் கடந்த 17 மாதங்களில் 3ஆவது முறையாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் மூன்று போட்டிகள் ஏப்ரல் மாதம் 18இ 20 மற்றும் 21ஆம் திகதிகளில் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. மேலும் ஏப்ரல் மாதம் 25 மற்றும் 27ஆம் திகதிகளில் முறையே 4ஆவது மற்றும் 5ஆவதும் இறுதியுமான போட்டி லாகூரில் நடைபெறும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைடு தெரிவித்துள்ளது. இவ் ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடுவதற்கான ஏப்ரல் 14ஆம் திகதி நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் இந்த தொடரின் போது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருப்பதால் பெரும்பாலான முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்ற. கடந்த முறையும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன் அணியிலும், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னெர் மற்றும் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். கிளென் பிலிப்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், பெர்குசன் ஆர்சிபி அணியிலும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இரு கிரிக்கெட் நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை குறிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இறுதியாக கடந்த மாதம் நியூஸிலாந்தில் இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை நியூஸிலாந்து 4:1 என கைப்பற்றியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *