உள்நாடு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு..!

அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹானின் ஒருங்கிணைப்பின் கீழ், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.சுபைதீனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் ஏ.எல்.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றசீது மற்றும் ஏனைய பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *