உள்நாடு

கமர் இல்ல வெற்றி விழாவில் அதிபர், ஆசிரியர், உதவியோருக்கு பாராட்டு

அல் பத்ரியாவின் 2024 இல்ல விளையாட்டு போட்டி சாம்பியனாக கமர் இல்லம் மகுடம் சூடிக்கொண்டது அறிந்த விடயமே.கடந்த நான்கு வருடங்களாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டிருந்த நிலையில் கமர் இல்லம் கடைசியாக 2016 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நிறைவடைந்த 2024ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டிகளில் கமர் இல்லம் மீண்டும் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியை கொண்டாடும் முகமாகவும் வெற்றிக்கு பாடுபட்டவர்களை கௌரவிக்கும் முகமாகவும் நேற்றைய தினம் திவானி மண்டப வளாகத்தில் இராப் போசன விருந்துடன் கூடிய கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு கமர் இல்லத்தின் பழைய மாணவர்களின் முயற்சியில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

கமர் இல்லத்தின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஆகியோருக்கும் நட்பு ரீதியாக குறிப்பிட்ட எதிரணி பழைய மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சுமார் 300 பேர் அளவில் கலந்து கொண்டனர். இராப் போசனத்துக்கு முன்னதாக நடந்த நிகழ்வில் இந்த விளையாட்டுப் போட்டி நடப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்த அதிபர் உட்பட்ட ஆசிரியர் குழாத்தின் சேவைகளையும் பாடசாலையின் தேவை அறிந்து பாடசாலைக்கு உதவி செய்யும் சகல பழைய மாணவர் தனவந்தர் ஆகியோரின் சேவைகளையும் நினைவு கூறப்பட்டது.

இல்ல விளையாட்டு போட்டியில் கமர் இல்லத்துக்கு தலைமை தாங்கிய மாணவன் ரிஷ்காத் கௌரவிக்கப்பட்டதுடன் பழைய மாணவர்களுக்கான45 வயதுக்கு மேற்பட்ட அஞ்சல் ஓட்டத்தில் வெற்றி பெற்ற பழைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இது தவிர இல்லத்தின் வெற்றிக்காக சகல வழிகளிலும் பாடுபட்ட பழைய மாணவர்கள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர்.

 

(அப்ஹம் நிசாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *