உள்நாடு

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு..!

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் 10 வது வருட நிறைவையொட்டி  பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு   சங்கத்தின் ஸ்தாபகர் முஸம்மில் ஹாஜி உள்ளிட்ட சங்கத்தின் அங்கத்தவர்களின்  ஏற்பாட்டில்  வத்தளை  புதிய நகர சபை மண்டபத்தில்    சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.எம்.மொஹிடீன் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை  நடைபெற்றது.

ஹம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் , சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக தொழிலதிபர் ஏ.எச்.எம்.மாஹிர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கொலன்னாவ பள்ளித் தலைவர் ஐ.வை.எம்.ஹனீப்,  உலக பெளத்த மையத்தின் இலங்கை நிலையத் தலைவர் சுதத் தேவபுர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் விசேட பேச்சாளராக கலாநிதி ரவூப் ஷெய்ன்   மற்றும் மௌலவி அஸ்ஸெய்க் இப்பராஹிம்   ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதிதிகள் மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்ததுடன் அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள்   கலந்து கொண்டனர்.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *