உள்நாடு

அல் அக்ஸா வின் நடப்பாண்டின் சம்பியன் பட்டம் மக்கா இல்லம் வசம்..!

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் நடப்பாண்டில் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது மக்கா இல்லம்.

புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்பிட்டி கோட்டத்தின் 78 வருட வரலாற்றைக் கொண்ட அல் அக்ஸா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. அதனடிப்படையில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான குழு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்னர் முதலாம் திகதியிலிருந்து தனி மற்றும் குழு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.என்.எம். நஸ்ரின் மற்றும் எஸ்.எப். சாஜினாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு அதீதியாக கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்ணான்டோ கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கல்பிட்டி மக்கள் வங்கியின் முகாமையாளர், உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இப் பாடசாலையின் மக்கா, மதீனா மற்றும் ஜெருசலம் என 3 இல்லங்கள் போட்டியிட்ட இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டில் சம்பியன் கிண்ணத்தினை 325 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மக்கா இல்லம் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் இடத்தினை 296 புள்ளிகளுடன் மதீனா இல்லமும் , மூன்றாம் இடத்தினை 265 புள்ளிகளுடன் ஜெருசலம் இல்லமும் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்விற்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் உதவி செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *