உள்நாடு

வெல்லம்பிட்டி சக்ஸஸ் கல்லூரியில் புனித ரமழானை வரவேற்போம் நிகழ்வு

”புனித ரமழானை மாண்புடன் வரவேற்போம்” எனும் சிறப்பு நிகழ்வு, வெல்லம்பிட்டி (SUCCESS COLLEGE) சக்ஸஸ் கல்லூரியில், இன்று (07) வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெற்றுவருகின்றது.

கல்லூரி அதிபர் ஏ.எம்.எம். ஜௌபர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கொழும்பு – 09, தெமட்டகொடை வீதி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் பிரதம அதிதியாகவும், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இச்சிறப்பு நிகழ்வில், கல்லூரி மாணவ மாணவிகளின் புனித ரமழான் பற்றிய உரைகள், கஸீதாக்கள்இ ஹிப்ழ் மனனம் மற்றும் ரமழான் விழிப்புணர்வு நாடகங்கள் என்பனவும் நடைபெறும். அத்துடன், பெற்றோர்களிடம் ரமழான் சம்பந்தமான வினாக்களும் கேட்கப்படும். இதில், அதிகமான வினாக்களுக்கு விடைகளை அளிக்கும் பெற்றோர்களில் ஒருவருக்கு பரிசு வழங்கப்படும்.
ரமழான் உணவு வகைகளைத் தயாரித்து பரிமாறல் மற்றும் சமூகமளிக்கும் அனைத்து தாய்மார் மற்றும் மாணவிகளுக்கும் இலவசமாக ”ஹெனா” அலங்கார வேலைப்பாடுகளும் கைகளுக்கு செய்து கொடுக்கப்படும்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *