உள்நாடு

BAHRIYAN PREMIER LEAGUE SEASON 2 : விண்ணப்பங்கள் கோரப்படுகிறது

கல்முனை கல்வி வலய கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் அமைப்பினால் வருடாந்தம் இடம்பெற்று வருகின்ற BAHRIYAN PREMIER LEAGUE SEASON 2 இம்முறையும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் பாடசாலையில் 1996 முதல் 2020 ம் ஆண்டு வரை சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் தோற்றிய வருடங்களின் அடிப்படையில் போட்டியில் பங்கு பெறுகின்றனர். BAHRIYAN PREMIER LEAGUE SEASON 2 இல் இம்முறை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து ஆகிய இரு பெரு விளையாட்டுக்களை நடாத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் (மார்ச்) 01 ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 01 ம் திகதி வரை விண்ணப்பங்களை மாலை 8.00 மணி முதல் இரவு 10 மணி வரை பாடசாலை பழைய மாணவர் சங்க காரியாலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விண்ணப்ப முடிவுத் திகதி ஆகிய ஏப்ரல் 1 க்கு பிறகு எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் போட்டிகள் 2024 ஏப்ரல் 19 முதல் இடம் பெற ஏற்பாடாகி உள்ளதாகவும் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல். ஹாஜா தெரிவித்துள்ளார்.

 

(நூருல் ஹுதா உமர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *