உள்நாடு

நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் மாணவர்களுக்கான செயலமர்வு..

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு புதன் கிழமை (06) ஷேகுல் பலாஹ் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் பொதுச்செயலாளர் இப்றான்ஸா பவ்றுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.நெளஷாத் மொஹிதீன் வளவாளராக கலந்துகொண்டு ஊடகத்தின் முக்கியத்துவம் , தனிமனித வாழ்வில் ஊடகங்களின் வகிபாகங்கள், நாட்டின் ஜனநாயகத்திற்க்கு ஊடகத்தின் பங்களிப்பு போன்ற பல்வேறு தலைப்பில் விரிவுரை வழங்கினார்.

இந் நிகழ்வில் சுமார் 120 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியதோடு பாடசாலை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

(எம்.பஹத் ஜுனைட்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *