உள்நாடு

நாளை மீண்டும் இறுதிப் பரீட்சைகள்..!

மேல்மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதிப் பரீட்சைகள் நாளை (06) மீண்டும் நடைபெறவுள்ளன.

தவணை பரீட்சை நடாத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறவுள்ளதாக மேல்மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், வரலாறு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்களை தயாரித்த பின்னர், உரிய தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *