உலகம்

குவைத் மரதன் போட்டியில் இலங்கை மாணவன் முதலாமிடம்..!

கடந்த சனிக்கிழமை (02.03.2024) “Gulf Bank-Kuwait” இனூடாக நடாத்தப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டப் போட்டியாளர்கள் கலந்து கொண்ட மரதன் ஓட்டப் போட்டியில் 18 வயதுக்கு கீழ் பிரிவில் குவைத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவன் மொஹமட் ஷீராஸ் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் ஷீராஸ் மற்றும் திருமதி மஹ்ரூசா கலீல் தம்பதிகளின் புதல்வன் மொஹமட் ஷீராஸ் கல்வியிலும், விளையாட்டிலும் குவைத்தில் திறமை காட்டி வருகிறார். பாடசாலை மட்டங்களிலான பல்வேறுபட்ட தடகள போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தப் போட்டிக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர் . இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர்  தாவூத் மராஃபி அவர்கள் விளையாட்டு வீரர்களை பாராட்டி உட்சாகப் படுத்தினார்.

(ஹரீஸ் ஸாலிஹ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *