உள்நாடு

வெலிகம ஹப்ஸா அரபிக் கல்லூரியில் தீ விபத்து. விசாரணைகள் ஆரம்பம்

வெலிகம ஹப்ஸா அரபிக் கல்லூரியின் 4ஆம் மாடியில் ஏற்பட்ட தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

ஐந்து மாடிகளைக் கொண்ட இக் கல்லூரியின் நான்காம் மாடியிலேயே தீ பரவியுள்ளது.மாணவிகளின் தங்குமிடமாக விளங்கிய இம் மாடியில் தீ பரவலின் போது 45 மாணவிகள் அங்கிருந்துள்ளனர்.எனினும் தீயினால் அவர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென போலிசார் தெரிவித்தனர்.

சேத விபரங்கள் பற்றி இன்னும் மதிப்பீடுகள் மேற்கொளாளப்படவில்லையென்றும் விசாரணைகள் துரிதமாக மேறகொள்ளப்பட்டு வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *