உள்நாடு

இன்று எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்.

எரிபொருள் விலைகள் இன்று (4) இரவு திருத்தப்பட்டு புதிய விலைகள் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும் அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் முதலாம் திகதி திருத்தியமைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல் , சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றில் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடணப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *