உள்நாடு

நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு – எச்சரிக்கை!

கடும் வெப்ப நிலையால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுவதுடன், நரம்பு மண்டல செயற்பாடும் குறைவடையலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை உணரப்படுவதால் மனித உடலில் நீரிழப்பு ஏற்படலாம் என வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டம் போன்ற பிரதேசங்களில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதோடு, நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக தொடர்ந்தும் தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கால கட்டத்தில் அதிகமாக திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *