உள்நாடு

மாவை சேனாதிராஜா பிமல் ரத்னாயக்க சந்திப்பு..! நாட்டின் அரசியல் நிலைமை பற்றி ஆராய்வு..!

நேற்று (27.02.2024) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழ உறுப்பினரான தோழர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்

தற்போது நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலமைகள், பொருளாதார நெருக்கடி, மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஒரு நீண்ட கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் சுமுகமான உரையாடாலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகக்தாகும்.

இதன்போது இருசாராருக்குமிடையில் ஒரு நெருக்கமான பரிந்துணர்வு ஏற்பட்டதுடன் எதிர்காலத்திலும் இந்த உரையாடலை தொடர வேண்டுமென இணக்கப்பாட்டுடன் சுமுகமான கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *