உள்நாடு

இன்றைய வானிலை..

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அனுராதபுரம் அதிகபட்ச வெப்பநிலை 32 (0C)

மட்டக்களப்பு அதிகபட்ச வெப்பநிலை 30 (0C)

கொழும்பு அதிகபட்ச வெப்பநிலை 35 (0C)

காலி அதிகபட்ச வெப்பநிலை 32 (0C)

யாழ்ப்பாணம் அதிகபட்ச வெப்பநிலை 32 (0C)

கண்டி அதிகபட்ச வெப்பநிலை 31 (0C)

நுவரெலியா அதிகபட்ச வெப்பநிலை 21 (0C)

இரத்தினபுரி அதிகபட்ச வெப்பநிலை 35 (0C)

திருகோணமலை அதிகபட்ச வெப்பநிலை 32 (0C)

மன்னார் அதிகபட்ச வெப்பநிலை 33 (0C)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *