உள்நாடு

அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி..!

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கும் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகளில் 21 பழைய மாணவ அணிகள் பங்கேற்கவுள்ளது. இப்போட்டிகல் யாவும் பகல் நேரப் போட்டிகளாக இடம்பெறவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றிப்பெறும் அணிக்கு ரூபா 75,000 பணப் பரிசும், சம்பியன் கிண்ணமும் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூபா 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும் என்றும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தெரிவித்தார்.

 

(அபு அலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *