உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12 வது சர்வதேச ஆய்வரங்கு..  நுழைவுச்சீட்டு அறிமுகம்..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12வது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான  நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும்  பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இன்று (26) இடம்பெற்றது.
உள்ளூர் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளில் குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம்  பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *