உள்நாடு

காஸா குழந்தைகள் நிவாரணத்துக்கு அமைச்சரவை அனுமதி..

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் ரமழான் மாதத்தில் காஸா சிறுவர் நிதியத்திற்கு(Children of Gaza Fund) அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கை வங்கியின் (7010) தப்ரபேன்(747) கிளையில் 7040016 என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறும், வைப்பு செய்த ரசீதை 0776973039 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப்பில் அனுப்புமாறும் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *