உள்நாடு

உத்திக பிரேமரத்ன எம்.பீ இராஜினாமா..!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உத்திக பிரேமரத்ன 2020 பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

விமல் வீரவன்ச தலைமையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படும் குழுவில் தற்போது, உத்திக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *