உள்நாடு

”ஸிஹாஹ் ஸித்தா” ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுக நூல் வெளியீட்டு விழா

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தமிழ் பிரிவு மற்றும் ரஹ்மத் பதிப்பகம் இணைந்து நடத்தும் ‘ஸிஹாஹ் ஸித்த’ ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுக நூல் வெளியிடும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.03.2024) பி.ப 4.00 மணிக்கு அதிபர் டி.ரிஸ்வி மரிக்கார் தலைமையில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜாமியா நளீமியா இஸ்லாமிய நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஏ.சி அகார் முஹம்மத் கலந்து கொள்ள உள்ளத்துடன், சிறப்பு அதிதிகளாக ,சென்னை-மந்தைவெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா கே.எம் இல்லியாஸ் ரியாஜி, புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் தலைமை இமாம் ஹாஃபிழ் ஏ.பீர் முஹம்மது பஹாபி, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். தமீமும் அன்சாரி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் ஏ.ஏ.ஏ.அஸ்வர், ரஹ்மத் பதிப்பகத்தின் தலைவர் எம்.எம். முஸ்தபா, ஆளுனர் சபையின் செயலாளர் அலவி முஹ்தார், ஆளுனர் சபையின் சமய உபகுழு தலைவர் எம்.டி.ஏ.ஆரிப், உப அதிபர் ஏ.எம்.மிஹ்ழார் மற்றும் சர்வதேச புகழ் ஒளிபரப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *