உள்நாடு

நிகவரட்டிய கொல்லந்தழுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் வித்தியாரம்பம் நிகழ்வு

நிகவரட்டிய கொல்லந்தழுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 1 இற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பம் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய புதிய தரம் ஒன்றிட்கான மாணவர்களை உள்ளீர்கும் வித்தியாரம்பம் நிகழ்வு நிகவரட்டிய கல்விக் கோட்டத்திற்குற்பட்ட கொல்லந்தழுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.எச்.எம்.ஸாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டதுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிகவரட்டிய கோட்டக்கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ்.எம்.எஸ். பஸ்மி அஹமட் அவர்கள் பங்கேற்றிருந்ததுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஏ.எம்.எம்.இப்ராஸ் -கொல்லந்தழுவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *