உள்நாடு

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம். 17 வயது யுவதி கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு, 15 வயதான சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில், 17 வயது யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், களுத்துறை பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.சந்தேக நபரான 17 வயது யுவதி, சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனைச் சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுமியைத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால், சிறுமியின் தாய் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். இந்நிலையில், சந்தேக நபரான 17 வயது யுவதி 15 வயது சிறுமியை ரயில் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனைச் சந்தித்துள்ளனர்.இதனையடுத்து, இந்தச் சிறுமி ஊர் திரும்பியதும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், 15 வயது சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், 17 வயது யுவதியைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *